உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது ! – யாழ் பா உ கஜேந்திரகுமார்

தமிழர்களுடைய பிரச்சினைக்கு உள்ளக பொறிமுறை தீர்வாக அமையாது என யாழ் மாவட்ட பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். கடந்த காலங்களில் இனவாத அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. தமிழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உண்மையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால் கடந்த 77 வருடங்களாக அரசாங்கங்கள் முன்னெடுத்துச் சென்றவற்றை கைவிட வேண்டும். நீங்கள் ஏன் வெளிநாட்டு பொறிமுறைக்கு பயப்பட வேண்டும். முதலில் உண்மையை கண்டறிய வேண்டும். நல்லிணக்கத்தை கொண்டுவர நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆகவே கடந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த போக்கினை தற்போதைய அரசாங்கம் தொடரக் கூடாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *