எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

எமது அரசியல்வாதிகள், கல்வி அதிகாரிகள் வடக்கு – கிழக்கு மாணவர்களுக்கான பேருந்துக்களை பெற்றுக் கொடுப்பார்களா ?

பாடசாலை மாணவர்களின் பொது போக்குவரத்து வசதிகளை கருத்திற்கொண்டு ‘சிசுசரிய’ திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 2000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டுமென சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க நாடாளுமன்ற நேற்றைய அமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு கல்வி அதிகாரிகள் தங்கள் பிரதேசங்களுக்கான தேவையை முன்வைத்தள்ளார்களா ? இது வரை எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு கிழக்கின் பின் தங்கிய பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிகள் பற்றி அதிகம் பேசியதில்லை. குறிப்பாக பரந்து விரிந்த வன்னி நிலப்பரப்பில் பாடசாலை மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது என்பதே பெரும் போராட்டமாக உள்ளது. விக்கினேஸ்வரன் தலைமையிலான வட மாகாண சபையின் பதவிக்காலத்திலும் முதலமைச்சரும் அமைச்சர்களும் ஊழல்மோசடி செய்து தங்களை வளர்த்துக்கொண்டனர். மாணவர்கள் பற்றி அவர்கள் கிஞ்சித்தும் கவனம் செலுத்தவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *