குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குருந்துவத்த மற்றும் புபுரஸ்ஸ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தின் பொலிஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அண்மையில் அதிகரித்துள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணியில் இராணுவத்திலிருந்து தபபியோடியவர்களும் கனிசமாக ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வேர்களை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *