தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ! 

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

 

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சுவிஸ் அரசாங்கம் மனத் உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோவை ஆள்கடத்தல் முகவர் என முத்திரை குத்துகிறது.

மேலும், பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திறந்த வெளிச் சிறச்சாலையான ஹாசாவில் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட்ட பாலஸ்தீனமக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்ற போது அதனை தடுக்க முடியாத காலாவதியாகிப் போன அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு. ஈழத்தமிழர்கள் இனியும் இந்த அமைப்பை நம்புவதில் கால விரயமே. உபாயங்களை மாற்றிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *