இடம்பெயர்ந்த மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை வழங்கப்படுகின்றது – பாராளுமன்றத்தில் அமைச்சர் நிமல்

nimal-siriiii.jpgமோதல்கள் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக 268 வைத்தியர்களும் 500 தாதியரும் வடக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், உள்நாட்டில் பற்றாக்குறையாக உள்ள துறைகளுக்கே வெளிநாடுகளிலிருந்து வைத்தியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இலங்கை வைத்தியர்கள் சபையில் தற்காலிகப் பதிவை மேற்கொண்டுள்ளார்களா என்பதைக் கண்டறிய அரசாங்கம் கவணம் செலுத்துகின்றது.

அத்துடன் சுகாதார சேவைகளுக்காக வடக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள உபகரணங்கள் உரிய இடங்களுக்குச் சென்றடைந்துள்ளனவா என்பதையும் அரசு உண்ணிப்பாக அவதானித்து வருகின்றது. அறுவை சிகிச்சைக்காக அரசாங்க ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடியை நீக்கும் வகையில் சுகாதார அமைச்சின் செலவில் 30 நோயாளிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்

கொழும்பு சிறுவர் ஆஸ்பத்திரியில் 600 மில்லியன் ரூபா செலவில் அறுவை சிகிச்சை நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to MUKILVANNAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • MUKILVANNAN
    MUKILVANNAN

    DEAR NIMAL,I CANT BEGIN TO TELL YOU HOW VERY DEEPLY IMPRESSED AND MOVED I WAS BY YOUR FAITHFUL PERFORMANCE FOR SINGALA NATION.
    I DARE SAY YOU MAY BE TEMPTED TO FEEL A RESENTMENT AGAINST TAMILS THOSE WERE FRANKLY SUCCES AND BRAVE SOCIETY.
    COULDNT SOME CIVILIZED MANNER SAVE YOUR FACE IN THIS WORLD.

    Reply