இலங்கை நாடாளுமன்றத்தின் இரண்டு உறுப்பினர்கள் இருவேறு கிரிமினல் குற்றச் சாட்டுக்களின் பேரில் இருவேறு நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரனா குணவர்தன, சிறார் கடத்தல் சம்பவமொன்றுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இன்று நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தேசிய விடுதலை முன்னணியின் களுத்துறை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க நேற்றைய தினம் கம்பஹா அத்தனகல்ல நீதிமன்றில் சரணடைந்திருக்கிறார்.
அண்மையில் ஜே.வி.பியின் உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இவரும் ஏனைய ஐந்து நபர்களும் தேடப்பட்டுவந்தனர்.