மரணதண்டனையை மீளக் கொண்டுவரும் எண்ணம் எமக்கு இல்லை – நீதியமைச்சர்
மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் ஆராயவில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து நீதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சராகவுள்ள உள்ள ஜனாதிபதி மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்து தெளிவாக உள்ளார். நீதிமன்ற கொலையின் பின்னரும் இது குறித்து ஆராயப்படவில்லை.
தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கின்றோம் மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
இலங்கை நீதிமன்றங்களில் மரணதண்டனை தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் 1976ம் ஆண்டு முதல் மரணதண்டனையை நிறைவேற்றுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.