இரத்தினபுரி மாவட்டத்தில் 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி

இரத்தினபுரி மாவட்டத்தில் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் மூலம் ஒரு வருட காலப் பகுதியில் 297 மில்லியன் ரூபா நிதி பயன்படுத்தப்பட்டு 16,283 குடும்பங்களுக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் மின் சக்தி அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் சகலருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளிலுமுள்ள 2 இலட்சத்து 57 ஆயிரத்து 709 வீடுகளுக்கும் மின்சாரம் பெற்றுக் கொடுப்பதற்காக 5100 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *