வெளிநாட்டவரின் திட்டமிட்ட தாக்குதலால் யாழ் வடமராட்சி உறவு பலி !
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தாக்குதலுக்குள்ளான நால்வரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் அடியாட்களை அழைத்து வந்து தனது தந்தை, சகோதரன், சகோதரனின் மகன் மற்றும் சகோதரனின் மனைவி மீது கடந்த 19ம் திகதி தாக்குதல் நடாத்தியிருந்தார்.
இந்த நிலையில் அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.