தோற்றுப் போன ஆண்டிகள் உள்ளூராட்சி தேர்தலில் சங்கு சின்ன மடம் கட்டட கூட்டணி !
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டணியில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயக தமிழரசு கட்சி, சமத்துவ கட்சி ஆகிய 9 கட்சிகளும் கலந்துகொண்டிருந்தன. அதன்படி தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் குறித்த கலந்துரையாடலில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி. ரவீந்திரா (வேந்தன்), தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ், ஜனநாயக தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் மற்றும் சமத்துவ கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் சிலர் கலந்துகொண்டிருந்தனமை குறிப்பிடத்தக்கது.
காலம் காலமாக தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப்போன தமிழ் ஆண்டிகளும் கடந்த அனுரா அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆண்டிகளுமாகச் சேர்ந்து தற்போது உள்ளுராட்சிகளில் மடம்கட்டலாம் என்று பார்க்கின்றனர். ஆனால் இந்தக் கட்சிகள் மக்களால் தோற்கடிக்கப்பட்டதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளது. ஆனால் அக்காரணங்கள் எதனையுமே இதிலுள்ள எட்டு கட்சிகளும் ஒரு போதும் சிந்தித்துப் பார்த்ததில்லை. விதிவிலக்காக ஓரளவு நியாயத்தன்மையுடைன கிளிநொச்சியைத் தளமாகக் கொண்ட சமத்துவக் கட்சியும் இவர்களோடு இணைந்து தன்னுடைய தனித்துவத்தை தொலைத்துள்ளது.
வடக்கின் மாகாண சபையை சீரழித்த சி வி விக்கினேஸ்வரனும் அவருடைய அமைச்சர்களுமே மாகா மோசடிப் பேர்வழிகள் என்பதையும் அவர்கள் வடக்கு மாகாணத்தின் உரிமைகளை வென்றெடுக்கத் தவறியவர்கள் என்பதும் மக்களின் அபிவிருத்தியைக் கணக்கிலெடுக்காமல் தங்கள் அபிவிருத்தியை மட்டும் கருதி மோசடியில் ஈடுபட்டனர் என்பதும் சுயாதீனக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. மீண்டும் இந்த மோசடியாளர்களுக்கு வடக்குத் தமிழ் வாக்கள் வாக்களிக்குமளவுக்கு முட்டாள்களாக இருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.
கொள்கையற்ற எட்டுக் கட்சிகள் வெறும் வாக்கு வங்கிக்காக இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தும் போதே குழப்பம் ஏற்பட்டுவிடும். பாலியல் வெறியர்களை கும்பிடும் சி வி விக்கினேஸ்வரன் தலைமையில் உள்ள கட்சிகளைக் கொண்டு அவரது ஊழல் அமைச்சர்களைக் கொண்டு எவ்வாறு தமிழ் மக்களின் உள்ளுராட்சி மன்றங்களை வெல்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.