தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

தீர்வுகள் ஏதுமின்றி எட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்த காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் !

 

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்றைய தினம் 20.02.2025 கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் மூன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு ஏ 9 வீதியூடாக டிப்போசந்தி வரை நடைபெற்றுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி நேற்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை அதிகளவு புலனாய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் அறிய முடிகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *