இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

இன்றைய வட்டுவாகல் பாலம் நினைவுச் சின்னமாகும் – புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும் ! பா உ ரவிகரன்

“இறுதி வன்னி யுத்தத்தின் அடையாளங்களில் ஒன்று வட்டுவாகல் பாலம் அது நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படும். புதிய பாலம் புதிதாக நிர்மாணிக்கப்படும்” என பா உ துரைராசா ரவிகரன் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். வரவு செலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பிலிருந்து தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த வட்டுவாகல் பாலத்தை திருத்தவும் வடக்கின் விதிகளைத் திருத்தவும் ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டால் முல்லைத்தீவு மக்கள் மிகுந்த நன்மையடைவார்கள் எனவும் ரவிகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

அரசாங்கம் இன்றைய பாலத்தை நினைவுச் சின்னமாகப் பேண அனுமதி வழங்கியுள்ளதா எனத் தேசம்நெற் கேட்ட போது எமது அதிகாரிகள் அதற்கான திட்டவரைபைக் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே புதிய பாலம் நிர்மாணிக்கப்படும். பழைய பாலம் நினைவுச் சின்னமாகப் பேணப்படும் எனத் தெரிவித்தார்.

வழமைபோல் எமது அதிகாரிகள் நிதியைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவார்களா? அல்லது நிதியை குறித்த காலத்தில் வினைத்திறனுடன் பயன்படுத்தும் திறமையையும் ஆளுமையையும் கொண்டிருக்கின்றார்களா எனக் கேட்டபோது, நிச்சயமாக அவர்கள் நிதியை திருப்பி அனுப்பாமல் குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடித்து மேலதிக நிதிக்கான வேண்டுகொளை வைப்பார்கள் என உறுதியளித்தார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *