இலங்கை ஜனாதிபதிக்கு துருக்கி அழைப்பு !

இலங்கை ஜனாதிபதிக்கு துருக்கி அழைப்பு !

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் துருக்கிக்கு அரசமுறை விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும், துருக்கி குடியரசின் தூதுவர் செமி லுட்பூ டர்கட்டுக்கும் இடையிலான சந்திப்பின் போது தூதுவர் செமி லுட்பூ டர்கட் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார்.

துருக்கியில் கல்வி கற்பதற்கு இலங்கை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 15 புலமைபரிசல் கோட்டா 25 ஆக அதிகரிக்கப்படும் என்று உறுதியளித்துள்ள தூதுவர் ,இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு துருக்கி குடியரசின் பாராட்டினைத் தெரிவித்த தூதுவர் ‘ டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கிராமிய மக்களின் வறுமையை மட்டுப்படுத்துவதற்கு’ அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக குறிப்பட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *