தேசிய படை வீரர்கள் மாதம் இன்று முதல் அனுஷ்டிப்பு

ranawiru-month.jpg
பயங்கரவாதப் பிடியிலிருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி உயிர்நீத்த மற்றும் காயமடைந்த படைவீரர்களைக் கௌரவிக்கும் வகையில் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் திகதி வரையான ஒரு மாத காலத்தைத் தேசிய படை வீரர்கள் மாதமாக அனுஷ்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய படை வீரர்கள் மாதத்தை முன்னிட்டு அரசாங்கம்,  பாதுகாப்பு அமைச்சு, ரணவிரு அதிகார சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்லே இதனைக் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய படை வீரர்கள் மாதத்துக்கான பிரகடனத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைக்(இன்று)  காலை 10.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளார். படை வீரர்கள் ஞாபகர்த்தக் கொடியும் நமக்காக நாம்| என மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்ட மஞ்சல் நிறக் கைப்பட்டியொன்றும் நாளை (இன்று)  ஜனாதிபதிக்கு அணிவிக்கப்படும்.

படை வீரர்களுக்காக 100 மில்லியன் ரூபாவை சேகரிக்கும் நோக்கில் நமக்காக நாம் கைப்பட்டிகளை நாடு முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிதி படை வீரர்களின் நலன்புரி மற்றும் உதவித் திட்டங்களுக்காக வழங்கப்படும். தேசிய படை வீரர்கள் தினம் அடுத்த மாதம் 17ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே படை வீரர் நினைவுத் தூபி முன்றலில் அன்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் பிரதான வைபவம் நடைபெறவுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • Rohan
    Rohan

    அரச ஊழியர்களிடம் சம்மதமின்றி சம்பளம் வெட்டப் பட்டு இந்தப் பெட்டியில் போடப்பட்டது எல்லாம் முன்னர் நடந்த சம்பவங்கள். வாழ்க வாழ்க

    Reply