பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

பல்கலைக்கழக வெளிவாரிப் பேரவை உறுப்பினர்களை பதவி விலக பணிப்பு

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் வெளிவாரிப் பேரவை உறுப்பினர்கள், எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்பாக தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி இடம்பெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியால் அண்மையில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து பேரவையின் அனைத்து வெளிவாரி உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரியிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக்தில் தற்போது பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட 15வெளிவாரி உறுப்பினர்கள் உள்ளனர்.

உதவிக் கல்விப் பணிப்பாளர் பஞ்சநாதன் சுதர்சன், சட்டத்தரணி பத்திநாதர் அன்ரன் புனிதநாயகம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப் பணிப்பாளர் தில்லையம்பலவாணர் விமலன், சப்ரகமுவா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் மகிந்த எஸ் ரூபசிங்க, வாழ்நாள் பேராசிரியர் குமுது விஜேவர்த்தன, ஓய்வுபெற்ற வணக்கத்துக்குரிய பேராசிரியர் ஜி.பிலேந்திரன், சட்டத்தரணி டி.ரெங்கன், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதவான் திருமதி ஶ்ரீநிதி நந்தசேகரன், ஏந்திரி ரி. சாந்தாதேவி, வடக்கு உணவு நிறுவனத்தின் ஸ்தாபகரும் பணிப்பாளருமான கபிலன் கருணானந்தன், யாழ். ஆயர் இல்லத்தைச் சேர்ந்த வண. கலாநிதி பி.ஜே. ஜெபரட்ணம், லங்கா சஸ்ரெயினபிள் வென்ஜஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் குலேந்திரன் சிவராம், ஓய்வுபெற்ற பணிப்பாளர் நாயகம் வி.கனகசபாபதி, தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம் மற்றும் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு.திருமுருகன் மற்றும் மனோகரி ராமநாதன் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோரது நியமனங்கள் அரசியல் மற்றும் ஆன்மீக சிபாரிசுகளின் அடிப்படையில் அமைந்தவை. நீண்டகாலமாகவே இவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வினைதிறனற்றோர் இவ்வாறான பொறுப்புகளில் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது. எனவே எதிர்வரும் காலங்களிலாவது அரசியல் தலையீடுகள் அற்ற, பல்கலைக்கழகத்தை உலகத் தரத்திற்கு கொண்டுவருவதற்கு துணைநிற்கக்கூடிய உறுப்பினர்களை அரசு பேரவைக்கு நியமிக்க வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *