பிரித்தானியாவில் மட்டு அம்பாறை தமிழ்ப் பெண் கடலுணவு ஒவ்வாமையால் திடீர் மரணம் !
அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் பிரித்தானியா லிவர்பூல் (Liverpool) வசிப்படமாக கொண்ட காயத்திரி ஜெயதீசன் என்பவர் கடந்த ஜனவரி 25 இறந்துள்ளார். இவரது திடீர் மரணத்திற்கு உணவு ஒவ்வாமையே காரணம் எனக் கூறப்படுகிறது. இளம் தாயாரான இவர் உட்கொண்ட நண்டுக்கறி விஷமானதால் உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது.
புலம்பெயர் நாடுகளில் கிடைக்கப்பெறும் பெரும்பாலான ஆசிய நாட்டு கடலுணவுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். குளிர் நாடுகளில் கிடைக்கப்பெறாத நண்டு, இறால், கணவாய் மற்றும் மீன் வகைகள் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.
கடலுணவு ஒவ்வாமை காரணமாக காயத்திரி ஜெயதீசன் இறந்தமை துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறான இறப்புகள் புலம்பெயர்நாடுகளில் நிகழ்வது அரிதாகவே காணப்படுகின்றது. உணவு ஒவ்வாமை ஏற்படும் போது உடனடியாக செயற்பட்டு தகுந்த சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.