கொழும்பில் தனியார் மருத்துவ கல்லூரி அமைவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

புதிய தனியார் மருத்துவக் கல்லூரி ஸ்தாபிப்பதை ஆட்சேபித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக பெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

அனைத்து மருத்துவக் கல்லூரியையும் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். நேற்று நண்பகல் பொரளையிலிருந்து ஊர்வலமாக சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வார்ட் பிளேஸிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுவரும் புதிய தனியார் மருத்துவக் கல்லூரியை நிராகரித்தே இவர்கள் நேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர். அமைக்கப்பட்டுவரும் புதிய பல்கலைக்கழகத்தில் 10 சதவீதமான இட ஒதுக்கீடு சமுர்த்தி குடும்பங்கள் மற்றும் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *