தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன – முதலில் தனியார் துறையில் விண்ணப்பியுங்கள் வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில் அமைச்சு அறிவுரை !

வேலையற்ற பட்டதாரிகள் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புக்களை பெற முன்வர வேண்டுமென, தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்> வேலையற்ற பட்டதாரிகளென தங்களை அடையாளப்படுத்தும் இவர்கள், முதலில் தனியார் துறையில் குவிந்திருக்கும் வேலை வாய்ப்புக்களைப் பெற முன்வரவேண்டும். அரச துறையில் மாத்திரம் வேலைவாய்ப்பு வேண்டுமென இளைஞர், யுவதிகள் பிடிவாதமாக இருக்கக்கூடாது. அனைவருக்கும் அரச துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை. தனியார் துறைகளில் அதிகமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. எனவே, இன்றைய இளையோர் தனியார் துறையிலும் வேலை செய்ய முன்வர வேண்டும். அதைவிடுத்து வீதிகளில் இறங்கிப் போராடுவதில் என்ன நியாயம் இருக்கிறது?. படித்தவர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரச பணிகள் கிடைத்தால் வேலை செய்யாமலேயே சம்பளம் எடுக்கலாம் என்ற எண்ணம் இளைஞர், யுவதிகளிலே காணப்படுவதை வெளிப்படுத்தும் நகைச்சுவை காணொலிகள் பலவும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டங்கள் தொடர்பில் வெளிவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *