என்.பி.பி பயணிக்கும் பாதை சில மாதங்களில் அனைவருக்கும் தெரியும் – நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார !
யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கியதன் மூலம் அவர் வழக்கில் இருந்து விடுதலையாகியதாக கருத முடியாது. நாங்கள் என்ன செய்வது என இன்னும் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். அதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி பயணிப்பது புதிய பாதையிலா அல்லது கடந்த அரசாங்கங்கள் பயணித்த பாதையிலா என்பதை மக்களுக்கு தெரிந்துகொள்ள முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யோஷித்த ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் சமூகவலைத்தலங்களில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
ஒருசில நடவடிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த அரசாங்கமும் பழைய அரசாங்கங்கள் சென்ற வழியிலேயே செல்கிறதா என சிலர் சந்தேகிக்கின்றனர் என தெரிவித்த நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, யாரையும் சிறையில் அடைத்து பழிவாங்குவதற்கு எங்களுக்கு எந்த தேவையும் இல்லை. அதனால் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம். என தெரிவித்துள்ளார்.