அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் – சித்திரை வரை காலக்கெடு !

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காவிடில் வடக்கு – கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நெல்லியடி பொதுச் சந்தை முன்பதாக முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நீதி அமைச்சர், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்று தெரிவித்துள்ளமை மிகவும் மோசமானது. தமிழ் அரசியல் கைதிகளில் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை விதிக்கப்படாதவர்களை விடுதலை செய்ய முடியும்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் , வடக்கு, கிழக்கை ஸ்தம்பிக்க வைக்கக்கூடிய ஒரு அறவழிப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *