ஓடும் ரெயிலில் ஸ்பா – மசாஜ் விசாரணைகள் ஆரம்பம் !
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு என முன் பதிவு செய்து எடுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில் மசாஜ் செய்யும் காணொலிகள் வெளியாகியதை அடுத்து அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மேலாளர் நேற்றுத் தெரிவித்துள்ளார். இந்த ரெயில் பெட்டிகளை முன்பதிவு செய்த நிறுவனம் இவ்வாறான தொழிலை தாங்கள் ரெயிலில் செய்வதைத் தெரியப்படுத்தவில்லை. இவ்வாறான மசாஜ் சேவைகளை வழங்குவதற்கு சட்ட அனுமதியில்லை எனவும் அம்மேலாளர் தெரிவித்தார்.