நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் ! 

நடைமுறைக்கு வருகிறது டிஜிட்டல் அடையாள அட்டைகள் !

இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் எரங்க , அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தையும் – நிர்வாக நடவடிக்கைகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிக தீவிரமாக செயற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *