கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இந்திய அரசு நூல்கள் அன்பளிப்பு

books.jpgகிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் முன்னேற்றும் வகையில் இந்திய தூதரகம் பெறுமதிமிக்க நூல்களை பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கென அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அரசியல், பொருளாதாரம், வரலாறு, சர்வதேச உறவாடல், உலகமயமாதல், இலக்கியம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, கலாசாரம் மற்றும் மகாத்மா காந்தி, பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஆகியோர்கள் தொடர்பிலான நூல்கள் உட்பட பொதுத்துறை அறிவுசார் நூல்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண உயர் கல்வி அபிவிருத்திக்காகவும், அதன் ஆளணி விருத்திக்காகவும், இந்தியக் குடியரசு வழங்கி வரும் தொடர் நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகவே கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நூல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் விக்ரம் மிஸ்ரி நூல்களை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர் தீசன் ஜெயராஜிடம் கையளித்தார். நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசார நிலையப் பணிப்பாளர் டிங்கர் அஸ்தனா, உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவன நூலகத்திற்கும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *