5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்! 

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு மட்டுமல்ல இந்தப் பரீட்சையே நிறுத்தப்பட வேண்டும்!
இறுதியாக நடந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு 31 ஆம் திகதி வழங்கப்படவிருக்கிறது. ஏலவே இப்பரீட்சையானது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த உள நெருக்கடியை வழங்குவதாக கல்வியாளர்கள் கண்டிக்கின்றனர். ஆளும் என்பிபி அரசாங்கமும் இப்பரீட்சை இலங்கையின் இலவச கல்வியின் அடிப்படை நோக்கங்களை சிதைக்கிறது என கூறுகிறது. கல்வி அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்கள் மாணவர்களை உளநெருக்கடிக்கு உள்ளாக்குவதாகவும், தமது அரசு இந்த பரீட்சைகளை நிறுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளதாகவும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்விக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதன் அவசியம் பற்றி தேசம்நெற் செய்திகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டு இருந்தமை தெரிந்ததே. அண்மையில் சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் ஒன்பது மற்றும் தரம் ஒன்பதிற்கு உட்பட்ட வகுப்புகளுக்கு தனியார் கல்விநிலையங்கள் வகுப்புகள் எடுக்கக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *