சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!  

சர்வதேச அரசியல் நெருக்கடிக்குள் இலங்கை சிக்குகின்றது! இஸ்ரேலிய போர்க்குற்றவாளி இலங்கையில்!

 

சர்வதேச கிரிமினல் நீதிமன்றினால் குற்றச்சாட்டப்பட்ட இஸ்ரேலிய குற்றவாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் என்கின்ற அமைப்பு அறிவித்துள்ளது. பாலஸ்தீன குடிமகனின் கொலையில் குற்றவாளியாகக் கருதப்படும் இஸ்ரேலிய சிப்பாய் கால் பெரென்பு என்பவர் கொழும்பிலுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நபரைக் கைதுசெய்யுமாறும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஒத்துழைக்குமாறும் ஹின்ட் ராஜாப் பவுண்டேசன் இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த விடயத்தில் இலங்கை அரசு எதிர்வினையாற்றினாலோ அல்லது எதிர்வினையாற்றமாலிருந்தாலே இது ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும். சம்பந்தப்பட்டவரை இலங்கை அரசு கைது செய்யாவிட்டால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்குச் செய்கின்ற ஒரு துரோகமாக அது அமையும். குறிப்பாக தென்னாபிரிக்காவின் முயற்சியினாலேயே சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலியப் பிரதமர் மற்றும் இராணுவ அதிகாரிகள், வீரர்களுக்கு எதிராக இனப்படுகொலைக்குற்றச்சாட்டை கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டது. அதற்கு இலங்கை தன்னுடைய பக்கத்தில் ஆதரவு வழங்க வேண்டிய கடமைப்பாட்டை உடையது.

ஆனால் சம்பந்தப்பட்ட இஸ்ரேலிய போர்க் குற்றவாளி கைது செய்யப்பட்டால், இஸ்ரேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் இலங்கையில் ஜனாதிபதி அனுரா தலைமையிலான ஆட்சிக்கு ஆப்பு வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. அதற்கு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்றவர்கள் அரசியல் ரீதியில் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஜனாதிபதி அனுராவுக்கு கொலை அச்சுறுத்தலும் உருவாகலாம். அதனால் இவ்விடயம் தொடர்பில் மிக அவதானமாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கால் பெரென்புக் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கவச வாகனம் ஒன்றின் திரையினூடாக சிதைவடைந்து இறந்திருந்த பாலஸ்தீன குடிமகன் ஒருவரின் உடலத்தைப் பார்க்கின்றார். இன்னொரு நபருடன் அராபிய மொழியில் சிரித்து கேலி செய்கின்றார். அவர்களது உரையாடலில் சிதைவடைந்த உடலை போர் வெற்றியின் அடையாளமாக கையாளுவது தெரிகின்றது.

 

காணொலியின் அடிப்படையில், காஸா பகுதியில் கால் பெரென்பு இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை, மனிதாபிமான சட்டங்களை மீறிய செயல்களில் அவர் நேரடியாக ஈடுபட்டிருந்தமை, யுத்த விதிமீறிய கொலையில் ஈடுபட்டமை மற்றும் இறந்தவரின் மதிப்பை தாழ்த்திய சம்பவங்கள் வெளிப்படையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *