ராஜபக்ஷ அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு தடை விதித்து அமேரிக்கா – கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறது இலங்கை அரசாங்கம்! 

ராஜபக்ஷ அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு தடை விதித்து அமேரிக்கா – கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறது இலங்கை அரசாங்கம்!

இலங்கை நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனல்ட் லூ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இவர்களுக்கு எதிரான நிதி மோசடி சம்பவங்கள் தொடர்பில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, எயார்பஸ் விமானங்களை சந்தை பெறுமதியை விட அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  அதேநேரம் இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் ஊழல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், ரஷ்ய முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறையின் 7031(c)சரத்தின் கீழ், இவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இரு தரப்பின் பெயர்களும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளதுடன் மிக் விமானம் மற்றும் எயா பஸ் கொள்வனவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேனவுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும் சிறந்த பாடமாகும். இவற்றை அடிப்படையாயகக் கொண்டு சர்வதேசத்தின் உதவியுடன் ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இது பற்றி மேலும் தெரிவித்த போது “அரசாங்கம் என்ற ரீதியில் இவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். கடந்த காலங்களில் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்க முற்பட்டவர்களுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தீர்ப்பு சிறந்த பாடமாகும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *