மாவீரர்நாள் எதிரொலிப்புகள் – மாவீரர் நாளை வைத்து இனவாதத்தீயை வளரத்துவிட வடக்கிலும் தெற்கிலும் பாரி முயற்சி:
சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:
1. பாதைகள் திறக்கப்படும் காணிகள் விடுவிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் யாழில் அறிவித்தார்: “நாம் ஏற்கனவே சில வீதிகளை விடுவித்துள்ளோம். காணிகளையும் விடுவிப்போம்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பந் துயகொத்தாவ உறுதியளித்தார். ஜனாதிபதியின் பணிப்புக்கமைய வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் நேரில் பார்வையிட நேற்று யாழ் வந்திருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசபடைகளும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, நிலைமைகளை விரைவில் வழமைக்கு திருப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!