சீனத் தூதுவரின் வடக்கு விஜயத்தால் வெகுண்டெழுந்த யாழ் பல்கலைக் கலைப்பிரிவும் சைக்கிள் கஜாவும்:
சீனத் தூதுவர் கீ செங்கொங்கின் வடக்கு கிழக்கு விஜயம் தமிழ் தேசியவாதத்தை வெகுண்டெழ வைத்தது. இந்தியாவின் உயிர்காக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள தமிழ் தேசியவாதம் மின்னதிர்ச்சி கொடுக்கப்பட்டது போல் வெகுண்டெழுந்தது. முள்ளிவாய்க்காலில் விளக்கேற்றிவிட்டு காத்து மழைக்குள் மாட்டிக்கொள்ளாமல் தலைநகருக்குச் சென்ற கஜேந்திரகுமார், “சீனத் தூதவர் கூறியது இனவாதக் கருத்து” என்று கொதித்துப் போய் வார்த்தைகளை விட்டுள்ளார். தமிழ் மக்கள் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததை வரவேற்று கருத்து வெளியிட்டதையே பொன்னம்பலம் கஜேந்திரன் இனவாதக் கருத்து என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “சீனத் தூதுவர் தனது பதவிக்கு பொருத்தமில்லாத விடயங்களில் தலையிடுகின்றார்” என்றும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டினார். அமெரிக்கத் தூதுவரையும் இந்தியத் தூதுவரையும் இலங்கை விவகாரங்களில் தலையிடுமாறு கெஞ்சுகின்ற கொழும்பில் வதியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் பெற்ற வாக்குகளிலும் பார்க்க குறைந்த வாக்குகளையும், சுயேட்சைக் குழுவில் போட்யிட்டு தோல்வியடைந்த கௌசல்யா நரேன் பெற்ற விருப்பு வாக்குகளிலும் குறைவான விருப்பு வாக்கைப் பெற்றே பாராளுமன்றம் சென்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மக்களிடம் தங்களுக்கு 10 ஆசனங்கள் வழங்க வேண்டும் என்று கேட்ட கஜேந்திரகுமாரின் இரண்டு ஆசனங்களில் ஒன்றைப் பிடுங்கி விட்டு ஒரு ஆசனத்தை மட்டுமே யாழ் மக்கள் அவருக்கு விட்டுவைத்துள்ளனர்.
சீனத்தூதுவரின் விடயத்தால் கொதித்த மற்றைய தரப்பு ரகுராம் துறைத்தலைவராக இருக்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு. தங்களுடைய பேராசிரியர் பட்டங்களை பணம் கொடுத்து, இந்தியாவில் உள்ள போலிச்சஞ்கிகைகளில் வெளியிட்டு பட்டம் பெறும் பேராசிரியர்களின், பாலியல் துஸ்பிரயோகங்களில் முன்னிலை வகிக்கும் பேராசிரியர்களின் கையில் உள்ள யாழ் பல்கலையின் கலைத்துறை மாணவர்கள் சீனத்தூவர் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்.