மன்னார் தலைமன்னார் பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பயிற்சி நிலையத்தில் கடந்த பல வருடங்களாகக் கடற்படையினர் முகாமிட்டு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த சில தினங்களாக மேற்படி மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியின் 3ஆம் மைல்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகள் குறைந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
மேற்படி 3ஆம் மைல்கல் பகுதியில் அமைந்திருந்த கடற்படையினரின் சோதனைச் சாவடி தற்போது மன்னார் நுழைவாயிலில் உள்ள கோட்டை சோதனைச்சாவடியுடன் இணைக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.