சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதில் தாமதம் இல்லை: இலங்கை மத்திய வங்கி

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை பெறுவதில் எவ்வித தாமதமும் இல்லை என இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் தெரிவித்துள்ளது.

“இது முற்றிலும் தவறு. கடன் தொகையை பெறுவதில் எந்தவித தாமதமும் இல்லை.  இறுதி பேச்சுவார்த்தைகல் முடிவடைந்துள்ளன. அத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த கணிப்பீடுகளும் முடிவடைந்துள்ளது” என மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்கள பதில் தலைவர் கே.டி.ரணசிங்க ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டு குழு தற்போது கொழும்பில் அரச தரப்பின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கடன் தொடர்பான சகல நடவடிக்கைக்ளையும் பூர்த்தி செய்ய காலம் தேவை.கடனுக்கான சகல கோரிக்கைகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவிற்கு சமப்பிக்கப்படும்” என ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தை தூண்டும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்தின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை வழங்க காலம் தாமதித்துள்ளதாக அமெரிக்கா நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *