வடக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து தப்பி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருகை தந்துள்ள மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு, ஆனந்தா கல்லூரியினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஊடகத்துறை அமைச்சிடம் இன்று கையளிக்கப்பட்டன.
இது தொடர்பாக ஆனந்தா கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வைபத்தில் நிவாரணப் பொருட்களை கல்லூரியின் பழைய மாணவரும் தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பாவிடம் கல்லூரி அதிபர் கையளித்தார். இவ்வைபவத்தில் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட, பௌத்த மதகுருக்கள் மற்றும் கல்லூரியின் பழைய மாணவர்கள் பலரும் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.