தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழர்களை முஸ்லீம்களை உள்ளடக்கிய 25 பேர் மட்டும் கொண்ட ஊழலற்ற அமைச்சவை நாட்டை ஆளும்!!! – கலாநிதி சிவதாசன்
தேசிய மக்கள் சக்தியின் மலையகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான கலாநிதி பிச்சைமுத்து சிவதாசன் அவர்களுடனான கேள்வி பதில் உரையாடல் நிகழ்வு லண்டனில் செப்ரம்பர் 7 அன்று நடைபெற்றது. லண்டன் தமிழ் புத்தகச் சந்தை ஏற்பாட்டாளர் பௌசர் மற்றும் மறுநிர்மாணம் குழவினரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
லண்டன் மோர்டனில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் தமிழகத்தின் சிறந்த கதைசொல்லியாக அறியப்பட்ட பன்முக ஆளுமையான பவா செல்லத்துரையின் நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் தேசம் ஜெயபாலன், எம்என்எம் அனஸ் மற்றும் பௌசர் மற்றும் சிலரும் கேட்ட கேள்விகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் என்பிபி இன் பிரதிநிதி கலாநிதி பிச்சைமுத்து சிவதாசன் பதிலளித்தார். தேசிய மக்கள் சக்தி என்பிபி இன் ஆதரவாளர் கணபதி சுரேஸ் கேள்வி பதில் நிகழ்வைத் தொகுத்து வழங்கி இருந்தார்.