டயலொக் ஊடாக துரித குறுந்தகவல் சேவை – அரசாங்க தகவல் திணைக்களம் நடவடிக்கை

breaking_news-from-dialog.jpgஅரசாங்க தகவல் திணைக்களம் டயலொக் டெலிகொம் நிறுவனத்துடன் இணைந்து துரித குறுந்தகவல் சேவையொன்றை வழங்கவுள்ளது. இது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் நேற்று முன்தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது இச்சேவை தொடர்பான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இவ்வைபவத்தில் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷசன யாப்பா,அமைச்சின் செயலாளர் ஏ. திசாநாயக்க, தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அநுஷ பெல்பிட்ட மற்றும் டயலொக் டெலிகொம் நிறுவனதின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரி நுசாட் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

டயலொக் தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி வரை இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த துரித குறுந்தகவல் சேவையை, இன்போ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு 678 எனும் இலக்கத்துக்கு எஸ்.எம்.எஸ். செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *