தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ்ஈழம் மட்டுமே. தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் – ஜெயலலிதா

jayalalitha.jpgஇலங்கைப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்பட, தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் அமைப்பது மட்டுமே. அதிமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைந்தால் இந்த தனி தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ஈரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது ஜெயலலிதா இவ்வாறு அறிவித்தார்.

ஜெயலலிதாவின் உரை…

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.  இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.  எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, ரவிசங்கர் அவர்கள் என்னை சந்தித்தார்.

sri_sri_ravisangar_.jpgஅப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை எனக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த வீடியோ காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது
தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது. அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன். உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை ராணுவம் உத்தரவிடுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது. நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள். இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன. கைதிகளைப் போல் அவர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?… அவர்கள் என்ன குற்றவாளிகளா?… இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?…குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் – தடுப்பு வதை முகாம்களை நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த – ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.  இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை – மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை – இரவோடு இரவாக, இலங்கை ராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர்.

வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், “எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்” என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது. இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. “முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,” என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, “இப்போதைக்கு அது முடியாது” என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

“இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்” என்று கேட்டதற்கு, “அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், “அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்” என்றும், “எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்” என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களவர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணி வெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?… அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?… சிங்களவர்கள் நடந்தால் வெடிக்காதா?…

இலங்கை ராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் – அடிமைகளைப் போல் – அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?… இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?… எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.  இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா. இதுவரை இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டு தனி தமிழ் ஈழ மாநிலம் அமைக்க அதிமுக பாடுபடும் என்று கூறி வந்தார் ஜெயலலிதா. ஆனால் முதல் முறையாக தனி தமிழ் ஈழம் அமைக்க அதிமுக பாடுபடும், உருவாக்கியே தீரும் என்பது மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

Show More

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • X and Y
    X and Y

    Dear Ms. Jeyalalitha,
    If you want, we can send your comic about „Thamil Eelam“ to Hines book, because you said that you can create a “Tamil Eelam”, if you and your political partners win the Indian election. Did any Tamils from Sri Lanka ask you such demand? Even the LTTE has abandoned the “Tamil Eelam” demand as they went to the peace talks since 2002.

    It is true that you and your co-partners are very good comics. We knew the Indian influence in our own problem since 1983 and the destruction your country made in Sri Lanka. If you want to help the Srilankan Tamils, please help the refugees from Sri Lanka in Tamilnadu. This is enough for us at the moment.

    Reply
  • BC
    BC

    புலிகளின் தாகமான தமிழீழத்தை ஜெயலலிதா உருவாக்கி தர இருப்பதால் புலிகள் இனியும் மக்களுக்கு துன்பம் கொடுக்காமல் சரணடை வேண்டும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    It is democratic world Mr.x and y….,Majority of Srilankan Tamils were outside Srilanka,They demand publicly,”TO RECOGONIZE TAMIL EELAM”,she reflects only this, majority voice – there is no need for research evidence for this,it is well documented in medias.If it is “Clownish”,did “you” heed other way round?.You must help the refugees Mr.x and y…,not writing from a cave and profiting from refugees.Everybody helping Srilankan Tamils only,”Srilankan Tamils not helping Srilankan Tamils”.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அடுத்த முதல்வர் பேசிவிட்டார். நான் ஆட்சியில் இருந்திருந்தால் பிரபாகரனை பிடிக்க இந்தியப் படையை அனுப்பியிருப்பேன். உள்நாட்டு பிரச்சனையில் தலையீடு செய்வது இயலாத காரியம் என சீட்டில் உட்கார்ந்ததும் சொல்லுவார். சுனாமி மக்களுக்கே சரியாக உதவாத அம்மாவா ஈழத் தமிழருக்கு ஈழம் வாங்கி தரப்பொறா? அம்மா சொல்வதெல்லாம் சும்மா?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஈழம் என்று ஒன்று இருக்கவேயில்லை. அது ஒரு கற்பனை வாதம் என்று சிலவாரம் முன்வரை அறிக்கை விட்ட ஜெயலலிதா, இன்று தனித் தமிழ் ஈழத்தை அதிமுக நிச்சயம் உருவாக்கியே தீரும் என்று சூளுரைக்கின்றார். எப்போது இலங்கை ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது என்பதை எனக்கு பல்லி கூடச் சொல்லவில்லை. உப்படித் தான் முன்பு வைகோவும் பேரணி திரட்டி வன்னியில் போராடச் சென்றவர். என்ன செய்வது தமிழகத்தில் தற்போது தேர்தல் காலம் என்பதால் இப்படிப் பல உரைகளைக் கேட்டுக் கேட்டு அப்பப்போ கொட்டாவி விட்டுக் கொள்ளவே முடிகின்றது. தேர்தல் முடிய ஜெயலலிதாவிற்கு அடுத்த சட்டமன்ற தேர்தல் வரை ஈழமும் மறந்து போய்விடும்.

    Reply
  • msri
    msri

    எல்லாரும் ஏறின குதிரையிலை சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாராம்! இது தேர்தல்கால “சுகயீனம்” தேர்தல் முடிய சுகம் வரும்!

    Reply
  • thurai
    thurai

    தமிழீழம் கேட்டபுலிகள் தானுமழிந்து தமிழீழப் பேச்சையுமே அழித்து விட்டனர். பரந்தன் முதல் முல்லைத்தீவு வரை மக்களற்ர பிரதேசம் ஆக்கி விட்டு தலமறைவாகிவிட்டார் ஒரு தலவர். மிகுதியிருப்பதையும் அழியாதே தாயே.

    துரை

    Reply
  • செல்வன்
    செல்வன்

    இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைப்பதுதான் நல்லது என்று ஜெயலலிதா கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, கோதபய ராஜபக்சே கூறியதாவது:

    இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியாது. தனி ஈழம் அமைப்பதாக இருந்தால், அதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கை தீவு அதற்குரிய இடம் அல்ல. விடுதலைப்புலிகளுடன் நடக்கும் போரில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்கும் வருத்தம் அளிக்கிறது.

    இதை நாங்கள் உணருகிறோம். என்றாலும், இதை பயன்படுத்தி, தீவிரவாதிகளுக்கு புத்துயிர் கொடுக்க சிலர் முயற்சி செய்து வருகிறார்கள். இதை ஏற்பதற்கு இல்லை.இந்த தீவிரவாதிகள் எங்கள் நாட்டை மோசமாக சேதப்படுத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்களை கொன்று இருக்கிறார்கள். அவர்கள் அறிவித்து இருக்கும் போர் நிறுத்தத்தை ஏற்பதற்கு இல்லை. இவ்வாறு கோதபய ராஜபக்சே கூறியதாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

    Reply
  • செல்வன்
    செல்வன்

    அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து இனி இலங்கைத் தமிழர்களால் ஒரே நாட்டில் வாழ முடியாது. தமிழ் ஈழம்தான் இதற்கு தீர்வு என்று கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக அணி வெற்றி பெற்றால் தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என ஜெயலலிதா கூறியதற்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். – எம்.பி.சிவாஜிலிங்கம்

    Reply
  • ramesh
    ramesh

    கேட்கிறவன் கேணயன் என்றால் எருமைமாடு ஏறோப்பிளேன் ஓட்டிய கதைதான் இது. இப்படிப்பேசியாவது தேர்தலில் வெல்லலாமா என்ற பொய்க் கணக்குத்தான் இது. படு சந்தர்ப்பவாதி. மக்கள்தான் பதில் சொல்லவேண்டும்.

    Reply
  • palli
    palli

    பார்த்திபன் அம்மா செருப்பு வேண்டின வழக்கே என்னும் முடிந்த பாடில்லை. இதிலை ஈழம் வேண்டி வைகோவிடம் கொடுக்க போகிறாரா? அதுக்கு முன் அம்மாவை வைகோவுக்கு அவர் கேட்ட தொகுதியை கொடுக்க முடியுமா என பார்க்க சொல்லவும். மிக விரைவில் அண்ணன் மகிந்தாவின் துணிவுக்கு இந்த தனிபிறவி தங்கயின் வாழ்த்துக்கள் என்னும் செய்தி பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாக வரும். அப்போது கருனாநிதி தான் உயிருடன் இருக்கும் வரை ஈழத்துக்கு சேவை செய்தே மடிவேன் என குட்டி செய்தியாக அதே பத்திரிகையில் விடுவார்.

    Reply
  • மாயா
    மாயா

    அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான். 1965ல் தேர்தல் காலத்தில் இலவசமாக 2 கிலோ அரிசி தருவதாக ஒரு அறிக்கை விட்டார் சிறீமா பண்டாரநாயக்கா. எப்படி? என்று கேட்டதற்கு, சந்திரனில் இருந்தாவது கொண்டு வந்து தருவோம் என்றார். சிறீமா சொன்னதை செய்தவர். ஜெயலலிதா சொன்னதை அடுத்த கணம் மறப்பவர். இதெல்லாம் வாக்குக்கான வாக்கறுதிகள்.

    Reply
  • சட்டம்பிள்ளை
    சட்டம்பிள்ளை

    பயங்கரவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. அதனால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருவகிறேன் என ஜெயலலிதா கூறினார்.

    அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தினமும் இரு தொகுதி வீதம் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்கிறார். இது குறித்து விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்கட்சியினர் “ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்பவர்களுக்கு மக்கள் பிரச்னை பற்றி என்ன தெரியும்’ என பேசி வருகின்றனர்.

    ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்வது குறித்தும், சாலையோர பிரசாரம், இரவு நேர பொதுக்கூட்டங்களை தவிர்க்க காரணம் குறித்தும், தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

    தேர்தல் பயணத்தின் போதே என்னை எப்படியும் தீர்த்து கட்டி விட வேண்டும் என பயங்கரவாத சக்திகள் தெரிவித்து இருப்பதாக, உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்திருப்பதாக மத்திய அரசு எனக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதனால், உச்சகட்ட பாதுகாப்பும், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    சாலைகளில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாலும், இரவு நேர பொதுக்கூட்டத்தை தவிர்க்குமாறு காவல் துறையினர் எச்சரித்தனர். அதனால் தான் நான் விமானம் மூலமாகவும், ஹெலிகாப்டர் மூலமும் வந்து பிரசாரம் செய்கிறேன் என்றார்.

    Reply
  • mukilvannan
    mukilvannan

    i see jeyalalitha as a resonably good person because she is good person. no one is perfect dont worry you wont vote in the indian election so have a peace in your mind.

    Reply
  • மாயா
    மாயா

    //செல்வன் on April 27, 2009 1:49 am இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர, தனி ஈழம் அமைப்பதுதான் நல்லது என்று ஜெயலலிதா கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து, கோதபய ராஜபக்சே கூறியதாவது: இலங்கையில் தனி ஈழம் அமைக்க முடியாது. தனி ஈழம் அமைப்பதாக இருந்தால், அதற்கு வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள். இலங்கை தீவு அதற்குரிய இடம் அல்ல.//
    ஜெயலலிதாக்கு தமிழீழம் அமைக்க கச்சதீவு கூட கிடைக்காது.

    //சட்டம்பிள்ளை on April 27, 2009 4:17 pm பயங்கரவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. அதனால் தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருகிறேன் என ஜெயலலிதா கூறினார். //

    தமிழீழம் வாங்கி கொடுப்பவரையுமா கொல்வாங்க? ரஜீவ் தமிழருக்கு சுயாட்சி வாங்கி கொடுத்ததுக்குதானே கொண்டாங்க? தமீழம் வாங்கிக் கொடுத்தாலும் லிஸ்டில இருந்தா போடுவாங்க. ஜெயலலிதா மட்டுமே புலிகளை நன்கு அறிந்தவர்?

    Reply