திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று பதவிப்பிரமாணம்!

திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் இன்று சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.

2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், 2020 பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *