களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 100 கைதிகள் இடமாற்றம்

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சுமார் 100 கைதிகள் நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணைகளை அடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் ஆண், பெண் கைதி மற்றும் விளக்கமறியல் கைதிகள் 1600 பேரும், 162 காவலர்களும் உள்ளனர். இக் கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நீதிவான் அநுர செனவிரத்ன மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *