வெள்ளவத்தைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தை வங்கி வைப்பைறையிலிருந்து இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்துடன் பாதுகாப்பாக வங்கியை விட்டு வெளியேறும் வரையிலும் வங்கி ஊழியர் ஒருவரை பணயக் கைதியாக கொள்ளைக் கோஷ்டியினர் பிடித்து வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.