பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகாரித்த மற்றொரு ஐரோப்பிய நாடு !

பலஸ்தீனத்தை தனிநாடாக மற்றொரு ஐரோப்பிய நாடான சுலோவேனியா அங்கீகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் ஸ்பெயின்  , நோர்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனிநாடாக சமீபத்தில் அங்கீகரித்தன.

இதனடிப்படையில், இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த பலஸ்தீனத்தை சுலோவேனியா அங்கீகத்துள்ளதுடன் பலஸ்தீனத்தை ஒரு சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்க சுலோவேனியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதுடன் பலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க நடத்திய வாக்கெடுப்பு வெற்றி பெற்றதுடன் இது குறித்து சுலோவேனியா பிரதமர் ராபர்ட் கோலோப் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்றைய பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திர நாடாக அங்கீகரிப்பது மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள பலஸ்தீன மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சியான ஸ்லோவேனியன் ஜனநாயகக் கட்சி ஆட்சேபனை தெரிவித்து இருந்ததோடு சுதந்திர பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்றும் மற்றும் இந்த நடவடிக்கை ஹமாஸ் அமைப்புக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி வாக்கெடுப்பை புறக்கணித்தது.

ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர்களில் சுவீடன், சைப்ரஸ், ஹங்கேரி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ள நிலையில் இதே போல் மால்டா நாடும் அதை விரைவில் பின்பற்றலாம் என்று தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *