நிறை குறைவான பாண் உற்பத்தி; பேக்கரி உரிமையாளர் மீது வழக்கு

காலி மாவட்டத்தில் நிறைகுறைவான பாண் உற்பத்தி செய்து விற்பனை செய்த 26 பாண் பேக்கரி உரிமை யாளர்களை காலி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர்.

காலி மாவட்டச் செயலாளர் அசோகா ஜயசேகரவின் பணிப்புரையின் பேரில் மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் இவர்களைக் கைது செய்துள்ளனர். இவர்களுக்கெதிராக காலி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *