தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி பொலிஸில் தஞ்சம் பெற்றிருந்த இளைஞரொருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார். கருங்காலிச்சோலையைச் செர்ந்த வெற்றிவேல் புஸ்பராஜா ( வயது19 ) என்ற இளைஞரே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
கடந்த 13 ஆம் திகதி திருமணம் செய்துள்ள இந்நபர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தொடர்ந்தும் இருக்க விரும்பவில்லை என்றும் தன்னை விடுவிக்க உதவுமாறும் கோரி கல்குடா பொலிசில் இன்று தஞ்சம் கோரியிருந்தார் .
குறிப்பிட்ட இளைஞரின் கோரிக்கையின் பேரில் அவரது வாக்கு மூலங்களை பதிவு செய்த பொலிஸார் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர் படுத்திய போது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான உத்தரவை நீதிபதி பிறப்பித்திருந்தார்