முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட தமிழர்களுக்கு உரிமை உண்டு – நாடாளுமன்றில் ஜே.வி.பி !

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உறவினர்களுக்கும் தோழர்களுக்கும் உரிமை உண்டு என கூறியுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனப் போர் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பேசிய அவர்,மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு போரில் இறந்தவர்களை நினைவு கூர உரிமை உண்டு.

முள்ளிவாய்க்கால் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சம்பூரில் நினைவேந்தல் நடத்தியதற்காக 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார்.

நக்பா சம்பவத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று உள்நாட்டுப் போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு இலங்கையர்களுக்கும் உரிமை உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.

போரில் இறந்தவர்களை நினைவு கூரும் உரிமையானது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமை எனவும், இலங்கையிலும் அந்த உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *