படகுகள் மூலம் சட்ட விரோதமான முறையில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நீர்கொழும்பு மீபுர பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் பயணத்துக்கு பயன்படுத்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள்; விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.