பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுப் பொதிகள் அனுப்பி வைப்பு

mi-27.jpgபுலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெருந்தொகையான மக்களுக்கு விநியோகிக்கவென ஆயிரக்கணக்கான உலர் உணவுப் பொதிகளையும், சமைத்த உணவுப் பொதிகளையும் விமானப் படை விமானங்கள் எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக விமானப் படைப்பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

விமானப் படையினர் நேற்று முன்தினம் 20 ஆயிரம் உலர் உணவு பொதிகளையும், நேற்றைய தினம் காலை ஆறாயிரம் சமைத்த உணவுப் பொதிகளையும் கிளிநொச்சிக்கு விமானம் மூலம் எடுத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்பின் பேரில் விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினரை நோக்கி பொதுமக்கள் சாரை சாரையாக வர ஆரம்பித்ததை அடுத்து, அதனை தடுக்கும் வகையில் புலிகளால் மூன்று தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 238 பொது மக்கள் அவசரமாக மீட்டெடுக்கப்பட்டு விமானப் படை விமானம் மூலம் அவசரமாக அநுராதபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என்றும் விமானப் படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *