ஈஷி கேஷ் மூலம் போதைப்பொருள் விநியோகம் – பெண் கைது !

சிலாபத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு ஈஷி கேஷ் மற்றும் வேறு பல முறைகளைப் பயன்படுத்தி ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள், பல்வேறு வங்கிகளுக்கு சொந்தமான ஏ.ரி.எம் அட்டைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

முந்தல அகுணவில பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய வயம்ப குமாரி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *