பொலிஸ் பதிவு இல்லை 5,000 ரூபா அபராதம்

பொலிஸ் பதிவின்றி நான்கு தமிழ் இளைஞர்களை தனது கடையில் வேலைக்கு அமர்த்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அதன் உரிமையாளரான டபிள்யூ.பீ.பெர்னாண்டோ என்பவருக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜயகிடி அல்விஸ் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தார். கட்டுநாயக்கப் பகுதியில் பொலிஸாரும், படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இவரின் கடையில் நான்கு மலையகத் தமிழ் இளைஞர்கள் பணிபுரிந்த தெரியவந்தது.

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகள் சந்தேக நபருக்குத் தெரிந்தும் அதனை செயற்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளார் என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கடை உரிமையாளரும் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவே நீதிவான் மேற்படி அபராதத்தை விதித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *