நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரிப்பு !

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளிலுள்ள அறைகளின் திறனைத் தாண்டியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளதாக செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கும் மேல் அரசாங்கம் செலவிடுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த கைதிகளில் 53 சதவீதமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 27 சிறைகளில் 187 கழிப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதுபார்க்கும் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறையில் அடைக்கப்படும் கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் ஆயிரத்து 795 கைதிகள் சிறையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *