கிளிநொச்சியில் இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு !

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்திப் பகுதிலுள்ள நீர்ப்பாசன கால்வாய் ஒன்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நீர்ப்பாசன வாய்க்காலுக்கு  பாய்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

நேற்று (13)  இரவு இடம்பெற்றதாக நம்பப்படும் இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியை சேர்ந்த 20 வயதுடைய தயாளன் தனுஷன் மற்றும் அழகாபுரி பகுதியை சேர்ந்த 18 வயதுடைய கிருஷ்ணன் சதீசன் ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மரண விசாரணை மேற்கொண்ட கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான்  ஜமீல் விசாரணைகளை மேற்கொண்டார்.

சடலங்கள் உறவினர்களால்  அடையாளம் காட்டப்பட்டதனையடுத்து   அவை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *