யுக்திய நடவடிக்கை – 863 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு கைதானவர்களில் 24 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைக்கு அடிமையான 19 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

 

இந்த நடவடிக்கையின் போது 303 கிராம் ஹெராயின் போதைபொருள், 141 கிராம் ஐஸ் போதைப்பொருள், 10 கிலோ கஞ்சா, 66, 0573 கஞ்சா செடிகள், 4 கஞ்சா சுருட்டுகள் , 29 கிராம் தூல் போதைப்பொருள், 1250 போதை மாத்திரைகள், 135 கிராம் மதன மோதக குளிசைகள், ஒரு கிராம் குஷ் போதைபொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன .

 

அத்துடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 39 பேர் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *