இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றேன் -வைகோ

india-election.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மட்டுமே மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ம.தி.மு.க.பொதுச் செயலரும் விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான வைகோ தெரிவித்தார். ராஜபாளையம் அடுத்த சிவலிங்காபுரத்தில் தனது தேர்தலில் பிரசாரத்தை புதன்கிழமை துவக்கி வைகோ பேசியதாவது;

இலங்கை அரசு அறிவித்த இருநாள் போர்நிறுத்தம் வெறும் கண்துடைப்பாகும், இந்த இரு நாட்களில் இலங்கை இராணுவம் காங்கிரஸ் கட்சியின் பேராதரவுடன் ஆயுதங்களைப் பலப்படுத்தியுள்ளது.இலங்கைப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபைக்கும் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன். இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கவும் பாராளுமன்றத்தில் அவர்களுக்காக குரல் கொடுக்கவும் உங்களுக்கு சேவை செய்யவும் என்னை வெற்றிபெறச்செய்யுங்கள்.

நதிநீர் இணைப்புத்திட்டத்தை முதன்முதலில் பாராளுமன்றத்தில் எடுத்துக்கூறி அந்த மசோதா நிறைவேறச் செய்ததில் எனக்கு முக்கியபங்கு உண்டு. தமிழகத்தில் மின்வெட்டு,உரத்தட்டுப்பாடு போன்றவற்றால் விவசாயிகள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். நாட்டிலேயே தென்தமிழகத்தில் தான் விவசாய நிலங்கள் அதிகம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நல்லது நடக்கும்.இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *