44 ஆண்டுகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் சிறீதரன்!

பயங்கரவாதச் சட்டத்தின் வரலாறுகள் இரத்தக்கறை படிந்தவை என்பதால் இதுகுறித்து ஆழமான விவாதங்கள் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு 44 ஆண்டுகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டதையும் சிறிதரன் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

நீதி அமைச்சர் புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவந்துள்ள போதும் இதில் தமிழ் மக்களுக்கு திருப்தி இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.

 

எனவே பயங்கரவாத சட்டத்தில் சிறு சிறு மாற்றங்களை கொண்டுவராமல் முழுமையான மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *